JASH PHOTOGRAPHY

Tuesday, June 29, 2010

அமீரகத்தில் அன்லாக் பண்ணிய ஆப்பிள் ஐ-போன் 4 விற்பனை


ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஐ-போன் 4 மாடலை அமீரகத்தில் வெளியிட இன்னும் ஒரு மாதங்கள்  இருக்கும் நிலையில் துபாயை சேர்ந்த தனியார் நிறுவனம் அன்லாக் செய்யப்பட ஐ-போன்களை  விற்பனைக்கு செய்ய துவங்கியுள்ளது. அல்ஷாப்.காம் என்னும் இந்த வியாபாரியிடம் ஐ-போன் 4 16gb மற்றும் 32gb மாடல்கள் இருக்கின்றன. இந்த போன்கள் அன்லாக் செய்யபட்டுள்ளதால் எந்த ஒரு சிம் கார்டும்  உபயோகித்து கொள்ளலாம். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ரிஸ்வான் கூறுகையில் ஐரோப்பியா, ஆசியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து இந்த போன்களை  இறக்குமதி செய்யப்படுவதாக கூறுகிறார். ஆப்பிள் ஐ-போன்களுக்கு உலகமெங்கும் மிகுந்த வரவேற்பு இருப்பதால் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டு உள்ளார். நேற்று  மட்டும் 100 போன்கள் முன்பதிவு செய்யப்பட்ட போன்கள் விற்றுள்ளார், இதற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளதாக தெரிவிக்கிறார்.ஆனால் விலை மட்டும் ரொம்பவே அதிகம். 16GB மாடல் 5,500 திர்ஹமிர்க்கும், 32GB மாடல் 6,200 திர்ஹமிர்க்கும் கிடைக்கிறது. இதே போன் அமெரிக்காவில் 16GB மாடல்730 திர்ஹமிர்க்கும், 32GB மாடல் 1,097 திர்ஹமிர்க்கும் கிடைக்கிறது.
.


Monday, June 28, 2010

VPN Settings for iPhone



Countries like UAE has banned voip calls over internet.To use voip calls in IPhone you need to set up VPN Connection to make calls.VPN is used only for voice services not for browsing.

VPN SETTING (KONGSHARE)
Make sure that Wifi is Turned "OFF".

FIRST,
GO TO SETTINGS - GENERAL - NETWORK - VPN

CLICK ADD VPN CONFIGURATION

A PAGE OPENS

CHOOSE TAB PPTP AND THEN TYPE FOLLWING


Description : ANY NAME
Server : vpn.kongshare.com
Account : anonymous
RSA SecurID : off
Password : anonymous
Encryption Level : Auto
Send All Traffic : on
Proxy choose tab Manual
Server : vpn.kongshare.com
Port : 1010
Authentication : on
Username : Wifi Username
Password : Wifi password



VPN Settings HOTSPOT SHIELD:
Choose tab L2TP
Description : HotspotShield
Server : 68.68.107.100
Account : Check Link Below
RSA SecurID: OFF
Password : Check Link Below
Secret : password
Send All Traffic : ON


For Account And Password Please check the following link and get Account ID.
http://www.hotspotshield.com/clientless/iphone/get_started.php

Then click save button on top right side.Then check your wifi is turned ON and also turn ON the VPN.After authentication VPN will start and will get connected.You will get indication as "VPN" on top of the screen.That means
VPN is connected.Now you can use any of calling software to make voip calls over Internet.
-Jassim Buhari


இந்திய பூப்பந்து வீராங்கனை சைனா நேஹ்வால் தொடர்ச்சியாக மூன்று பட்டம் வென்று சாதனை


இந்திய பூப்பந்து வீராங்கனை சைனா  நேஹ்வால் தொடர்ச்சியாக மூன்றாவது பட்டத்தை வென்றுள்ளார். நேற்று நடந்த இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்று உலகின் பூப்பந்து வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைந்தார். இது சைனா வென்ற மூன்றாவது  ஓபன் சீரீஸ் பட்டம் ஆகும். இதற்கு முன்னர் இந்திய ஓபன் கரண்ட் பிரிக்ஸ் மற்றும் சிங்கபூர் ஓபன் சூப்பர் சீரீஸ் இந்த ஆண்டு வென்றுள்ளார்.

சைனா  நேஹ்வால் தன்னுடைய தாய்நாட்டிற்காக பல சாதனைகள் படைத்தது வருகிறார். சூப்பர் சீரீஸ் போட்டியை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் இவருக்கே சேரும். இது டென்னிஸ் விளையாட்டின் கரண்ட் சலம்க்கு ஒப்பானது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் காலிறுதி போட்டிகள் வரை சென்றவர் மற்றும் சிறுவர்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்ணும் இவரே ஆவார்.
சைனா நேஹ்வால் ஹர்யானா மாவட்டத்தில் உள்ள ஹிசார் என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தை டாக்டர்.ஹர்விர் சிங்க் , தாய் உஷா நேஹ்வால் இருவருமே முன்னால் பூப்பந்து வீரர்களே ஆவர்.தன்னுடைய எட்டு வயதில் இருந்து பூப்பந்து பயிற்சி பெற்று வருகிறார்.ஆகஸ்ட் 2009 சைனா நேஹ்வால் அர்ஜுனா  விருது பெற்றார். இந்திய அரசு இவருக்கு ஜனவரி 2010 பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது.

சீனியர் பிரிவில் வென்ற பட்டங்கள் :
- 2008 காமனவெல்த் யூத் கேம்ஸ் - தங்க பதக்கம்
- 2009 இந்தோனேசியா சூப்பர் சீரீஸ்
- 2009 ஜெய்பீ கப் செயத் மோடி மெமோரியல் இன்டர்நேஷனல் இந்திய கரண்ட் பிரிக்ஸ்
- 2010 பத்மிட்டியன் ஆசியா சம்பிஒன்ஷிப் - வெங்கல பதக்கம்
- 2010 இந்தியன் ஓபன் கரண்ட் பிரிக்ஸ் கோல்ட்
- 2010 சிங்கபூர் ஓபன் சூப்பர் சீரீஸ்
- 2010 இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரீஸ்.
-ஜாஸிம் புஹாரி


வருடம் ஐம்பது மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் நாவல் ஆசிரியர்


மனிதர்களை கொன்று வாம்பைராக்கும்  வாம்பைர் கதைகள் அமெரிக்காவில் எப்போதும் பிரபலம். ஜெ.கே.ரௌலிங் எழுதிய ஹாரி போட்டர் என்கிற கற்பனை கதை எத்தனை பிரபலம் என்பது உலக குழந்தைகள் அனைவரும் அறிந்ததே.

நாவல்
அமெரிக்க நாவல் ஆசிரியர் ஸ்டெப்னி மேயர் எழுதிய ட்வளைட்  என்கிற நாவல் அமெரிக்க மற்றும் இன்று உலகெங்கும் பிரபலமானது. வாம்பைரான நாயகன் ஒரு மனிதகுலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பது போன்ற ஒரு கதை, அதனால் அவர்கள் சமாளிக்கும் பிரச்சனைகள் பற்றிய கதையான இந்த நாவல் 2008 ஆம் ஆண்டு வெளியானது. இருபத்தி ஏழு மில்லியன் பிரதிகளை விற்ற இந்த நாவல் அந்த ஆண்டின் அதிகம் விற்பனையான புத்தகமாக தேர்வானது. அதனை அடுத்து 2009 ஆம் ஆண்டும் 26 .5 மில்லியன் புத்தகங்கள் விற்று பல சாதனைகளை முறியடித்தது. இதை எழுதிய ஸ்டெப்னி மேயர, டைம் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்கக நூறு நபர்களில் ஒருவராக 2008 ஆம் ஆண்டில் தேர்வு செய்தது.அதே போல போர்பஸ் பத்திரிக்கை, 2009 ஆம் ஆண்டில் உலகின் பிரபலமான நூறு நபர்களில் இவரின் பெயரும் வெளியிட்டது. இவரின் ஆண்டு வருமானம் ஐம்பது மில்லியன் டாலர்கள்.  இவரது நாவல் உலகெங்கும் முப்பத்தி ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திரைப்படம்
நான்கு பாகங்கள் கொண்ட இந்த நாவல் இதுவரை இரண்டு பாகங்களே திரைப்படமாக வெளியாகி உள்ளது. முதல் படம் நவம்பர் 2008 லும், இரண்டாம் பாகம் நவம்பர் 2009 லும் வெளியாகி உலகெங்கும் 1.1  பில்லியன் டாலர்களை சம்பாதித்தது. மூன்றாவது பாகமான எக்லிப்ஸ் நேற்று பிரீவ்யூ ஷோ நடந்தது. வருகிற முப்பதாம் தேதி வெளிவர இருக்கிறது.

படத்தின் நாயகன் ராபர்ட் பட்டிசன்
இந்த படங்களின் நகயன் ராபர்ட் பட்டிசன் பற்றி நம் வாசகர்கள் அறிந்ததே. பார்க்க ஃபிளின்ட் ஜனவரி இதழில். இருபத்தி நான்கு வயதான இவர் இங்கிலாந்த் இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியாமிர்க்கு தூரத்து சொந்தமாம். 1500 களில்  இங்கிலாந்தில் வசித்து வந்த இவரது தந்தை வழியால் இவர் சொந்தம் என்கிற செய்தி சமீபத்தில் ancesty.com செய்தி வெளியிட்டது.
ட்வளைட் திரைபடத்தின் மூன்றாவது பாகமான எக்லிப்ஸ் திரைப்படத்தை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது இந்த நாவலின் ரசிகர்கள்.


Saturday, June 26, 2010

போட்டு தள்ளு அவனை, விலங்குகளுடன் இருந்து தப்பிக்க சில வழிகள்


காட்டுல நீங்க தனியா போன உங்களை போட்டு தள்ளுறது அதாவது உங்கள அட்டாக் பண்றது சிங்கமோ புலியோ கிடையாது. நம்ம கரடிதான்..! காடுகளில், குகைகளில் முன்பு வசித்த ஆதி மனிதர்களுக்கு குளிர், உணவுக்கு அப்புறம் மிகவும் சவாலாக இருந்த விஷயம் கரடியோட அட்டாக் தான்.. பெரும்பாலும் காட்டுல இருக்குற விலங்குகள் (சிங்கமோ, புலியோ) மனிதனை கண்டால் விலகி செல்லவே விரும்பும் அது எது வரைக்கும் என்றால் நம்ம சேட்டைய அது கிட்ட காட்டாத வரை. ஒரு வேலை நம்ம ஹீரோக்கள் மாதிரி உணர்ச்சிவசப்பட்டு உங்க வீரத்தை அதுகிட்ட காட்டுனீங்கனா அப்புறம் உங்க உசுரு கொசுறு மாதிரி ஆயிடும்.. 
கரடி: 
சரி நம்ம கரடி மேட்டருக்கு வருவோம்.. பொதுவா கரடி மனிதர்களை போல ரெண்டு கால் எழுந்து நிற்க குடியவை.. அதுனால மனிதர்களை கண்டால் யாரோ புது எதிரி என்று நினைத்து கொண்டு போட்டு தாக்கி விடும்.. சில சமயம் சும்மா போகும் மனிதர்களையும் தேடி வந்து போட்டு  தாக்கும்.. இப்படி ஆண்டுதோறும் கரடிகளால் சுமார் 150 பேர் தாக்கப்படுகின்றனர். கரடிகளிடம் இருந்து தப்பிக்க சில வழிகள் உண்டு. பொதுவா கரடிகள் சிங்களா  சிங்கம் மாதிரி போறவங்கள தான் தாக்குமாம், கூட்டமா போறவங்கள ஒன்னும் செய்யதாம், ஒருவேளை கரடியை நீங்க தனியா பார்த்தால்  ஓட அரம்பிக்காதீர்கள், உங்களைவிட அதுக்கு வழி நன்றாகவே தெரியும். கரடி உங்களை பார்க்கும் படி நில்லுங்கள் கைகளை தலைக்கு மேல் வைத்துக்கொள்ளுங்கள், தன்னை விட பெரிய மிருகம் என்று நினைத்து கரடி தானாகவே விலகி விடும்.., எங்காவது காட்டுக்குள் சென்றால் மீதமான உணவு பொருள்களை கூடாரத்திலிருந்து தள்ளி வைத்துவிடுங்கள் ஏனெனில், உணவை தேடி கரடி வரும்.
யானை:
கரடிக்கு அப்புறம் உங்கள தேடி வந்து ஆப்பு வைக்குற விலங்கு குட்டியோடு வரும் யானைகள். பொதுவாக யானைகள் வெள்ளை நிறத்தை தூரத்தில் இருந்தே எளிதாக கண்டுபிடித்துவிடும்,. காட்டுக்கு போகும் போது தப்பி தவறி வெள்ளை உடையை அணியமால் பார்த்துக்கொள்ளுங்கள.
புலி:
புலிகளை தேடி செல்லும் வன ஆராய்சியாளர்கள் மனித முகம் கொண்ட அட்டையை தலைக்கு பின்னல் மாட்டிக் கொள்வார்கள், ஏனென்றால் புலி எப்போதும் பின்னாடி பாய்ந்து பிடரியை அறையுமாம். பின்னாடி அட்டையை மாட்டிக்கொள்வதால் புலி குழம்பி கிளியாகி இடத்தை காலி செய்து விடும்...!
-முஹம்மது சாதிக்


Friday, June 25, 2010

உலகின் பாதுகாப்பான ரயில் சேவையாக துபாய் மெட்ரோ


உலகின் பாதுகாப்பான ரயில் நிலையமாக துபாய் மெட்ரோ ரயில் தேர்வாகியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் பதினொன்றாம் தேதி துவங்கிய வளைகுடாவின் முதல் ரயில் சேவையான துபாய் மெட்ரோ இன்னும் முழுமையாக சில ரயில் நிலையங்கள் துவங்காத நிலையில் தினமும் ஒரு லட்சத்தி பனிரெண்டு ஆயிரம் பயணிகளை சுமந்து இன்னும் சில சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் மிகுந்த குறைவான குற்றங்களை கொண்ட ரயில் நிலையமாக உள்ளதாக துபாய் காவல் துறையின் பாதுகாப்பு மற்றும் அவரசப்பிரிவின் துணை நிர்வாகி கோலாநெல் அப்துல்லாஹ் அல் கைத் (Colanel Abdullah Al Ghaith) நேற்று செய்தியாளர்களுடன்   தெரிவித்தார். அதாவது பத்து லட்சம் பயணிகளுக்கு 1.6 பயணிகளே திருட்டுக்கு உள்ளாகப் படுவதாக அவர் தெரிவித்தார். இது மிகுந்த வளர்ச்சியடைந்த மற்ற பெரிய நகரங்களை விட மிகக் குறைவானதாம்.  அதாவது பத்து லட்சம் பயணிகளில் பிரிட்டனில் பதிமூன்று பேருக்கும், சிகாக்கோவில் 12.3 பேருக்கும், அட்லாண்டாவில் 7.5 பேருக்கும், போஸ்னியாவில் 5.8 பேருக்கும் திருட்டுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
துபாய் மெட்ரோ ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இரண்டு திருட்டுகள் (இரண்டுமே பிக் பாக்கெட்) நடந்து இருக்கிறது. இந்த இரண்டு சம்பவமும் மிகுந்த கூட்ட நெருக்கடியில் மால் ஆஃப் எமிரேட்ஸ் மற்றும் புர்ஜ் கலிஃபா ரயில் நிலையங்களில் நடந்துள்ளது. ஆனால் சமிபத்தில் எந்த ஒரு தவறும் நடைபெறாததால் மக்கள் மிகுந்த பாதுகாப்பாக கருதுகிறார்கள். துபாய் மெட்ரோவில் திருட்டு போன்ற குற்றங்களை தடுக்க மட்டும் மூவாயிரம் காமெராக்கள் பயன்படுத்தப்படுகிறது.


Thursday, June 24, 2010

டென்னிஸ் வரலாற்றின் நீண்ட நேர ஆட்டம், மூன்றாவது நாளாய் தொடர்கிறது


163 ஆட்டம் ,1000 புள்ளிகள் , 10 மணிநேரம் கழித்து அமெரிக்காவின் ஜான் இச்நேர் மற்றும் பிரான்சின் மகுட் இருவருக்கு இடையே நடந்த வரலாற்று சிறப்பு மிகுந்த விம்பிள்டென் முதல் சுற்று ஆட்டம் 59-59 என்ற புள்ளிகளில் குறைந்த வெளிச்சம் காரணமாக இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டது. இந்த இருவருக்கும் இடையே ஆன ஆட்டம் செவ்வாய்கிழமை துவங்கியது, தலா இரண்டு செட்கள் என்ற நிலையில் குறைந்த வெளிச்சம் காரணமாக ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது. புதன்கிழமை பகல் பொழுதில் ஆட்டம் மீண்டும் துவங்கியது , ஐந்தாவது செட் ஆடிய அவர்கள் அன்று சூரியன் மறையும் வரை ஆடினார்கள்.ரசிகர்களும் ஆச்சர்யத்துடன் கண்டனர். இச்நீரால் நகல முடியவில்லை, மகுட் மிகுந்த கலைப்படைந்தர் ஆயினும் இருவரும் விட்டுக்கொடுக்காமல் போராடினார்கள். உலகமக்கள் அனைவரும் கால்பந்தின் மோகத்தில் இருக்கும் போது , இந்த ஜோடியின்  ஆட்டத்தால் அனைவரின் பார்வையும் விம்பிள்டென் பக்கம் திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

" எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த ஆட்டம்.எனக்கு தெரியும் அவர்களுக்கு இது கஷ்டமாக இருந்திருக்கும்,ஆனால் டென்னிஸ் விளையாட்டில் இது போன்று கேள்விப்பட்டது கிடையாதுஎன்று முதல் நிலை வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.  

இந்த போட்டியின் முக்கியமான சாதனைகள் :
-டென்னிஸ் வரலாற்றில் நீண்ட நேரம் ஆடிய ஆட்டம்(10 மணிநேரம்).முந்தைய சாதனை 6 மணிநேரம் மற்றும் 33 நிமிடங்கள்.
-டென்னிஸ் வரலாற்றில் நீண்ட செட் (SET) 118 ஆட்டம்.
-அதிகமான ஆட்டங்கள்(GAME) 163 , முந்தைய சாதனை 112.
-இரு வீரர்களும் ATP ஆட்டத்தின் ACE சாதனையை முறியடித்துள்ளனர்.மொத்தம் 198 ACEகள் முந்தய சாதனை 98 மட்டுமே.
-ஐந்தாவது செட் ஆட்டம் 7 மணிநேரம் 6 நிமிடங்கள் நடந்து இன்னும் முடியவில்லை.
-புள்ளிகள் 47-47 என்ற நிலையில் புள்ளிகள் தெரிவிக்கும் கருவி (SCOREBOARD) செயல் இழந்தது.


இந்த ஆட்டத்தின் மீதி இன்று மதியம் துவங்க உள்ளது. நாளையும் ஒரு ஆடுகளம் தயாராக உள்ளதாக விம்பிள்டென் வட்டாரம் தெரிவிக்கிறது. இருவரில் யார் வெல்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு இருகின்றனர். யார் வென்றாலும் சரி இருவருமே மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள்.
-ஜாஸிம் புஹாரி 


ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலர்ட்


மூன்று வருடம் முன்பு நடைபெற்ற தேர்தலில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சியை சேர்ந்த கெவின் ரூட் என்பவரே இதுவரை ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்து வந்தார். ஆனால் அவர் மீது அந்த கட்சியினரின் நம்பிக்கையின்மை அதிகரிக்கவே அவர் பதவி விலக நேரிட்டது. இதனை அடுத்து ஜூலியா கிலர்ட் போட்டியின்றி பிரதமராக தேர்வு செய்யபட்டார். இவரே ஆஸ்திரேலியா வரலாற்றில் முதல் பெண் பிரதமர்.

தனது கேபினெட் அமைச்சர்களை இன்னும்  தேர்வு செய்யாத நிலையில் வருகிற வெள்ளி அன்று கனடாவில் ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்ளவும் இருக்கிறார். பதினொன்று வருடம் எதிர் கட்சியாக இருந்த இந்த ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி
2007 ஆம் ஆண்டே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. அதிலும் இப்போது பிரதமர் மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜூலியா கிலர்டின் கணவர்  டிம் மத்திஷன் ஒரு முடி திருத்துபவர். 


Wednesday, June 23, 2010

பதினேழு ஆயிரம் கிலோமீட்டர் மிதிவண்டியில் சென்று கால்பந்தை பார்த்த ரசிகர்


சுற்றுச்சுழல் பாதுகாப்பாளர்  மற்றும் புகைப்பட கலைஞருமான  பெடல் ஜோ (PEDAL JOE) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து தென் ஆப்ரிக்கா வரை குழந்தைகளுக்கான மிதியுந்து (GO-KART) மூலம் கடந்து சாதனை படைத்துள்ளார்.

52 வயதான ஜோவின்  தாயகம் பிரேசில். இவர் பிரேசில் கால்பந்து அணியின் ரசிகர். தற்போது நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண வேண்டும் என்ற ஆவலுக்குள்ளானார். இவர் இதற்கு முன்னர் இரண்டு உலக கோப்பை போட்டியை மிதிவண்டிமூலம், 56 நாடுகளுக்கு மேல் கடந்து சென்று கண்டவர்.  ஜோ  ஜனவரி 2008 ஆம் ஆண்டு மிதியுந்து மூலம் தென் ஆப்ரிக்கா செல்லும் தன்னுடைய திட்டத்தை தெரிவித்தார். இதற்காக பேர்க் டயஸ் (BERG TOYS) என்னும் டச்சு  நாட்டு  நிறுவனம் பிரத்யேகமாக  வண்டி ஒன்றை தயாரித்து கொடுத்தது. இந்த வண்டி நீண்டு உழைக்கும் சக்கரங்களும், முகப்பு விளக்குகளும், பல அதிநவீன வசதிகளும் கொண்டது. மேலும் சூரிய-மின் தகடு (சோலார் பேணல்) மற்றும் திருட்டு தடுப்பு தொழில்நுட்பங்களும் உள்ளது.

பெடல் ஜோ  10 மே 2008 அன்று பாரிஸ் நகர்  ஈபில் கோபுரம்  முன்பிருந்து தன் பயணத்தை  தொடங்கிய இவர் முறையே போர்த்துகல், ஸ்பெயின், மொரோக்கோ, மேற்கு சஹாரா, மௌரிடானியா, செனகல், மாலி, புர்கினா பாசோ, ஐவரி கோஸ்ட், காணா, டோகோ, பெனிம், நைஜீரியா, கேமரூன், கபொன், கோங்கலீசு குடியரசு, காங்கோ குடியரசு, அங்கோலா, நமிபியா நாடுகளை  கடந்து 1 ஜூன் 2010 அன்று ௦ தென் ஆப்ரிக்காவின்  ஜோஹன்னேச்புர்க்(johannesburg) நகர் சென்றடைந்தார். அங்கு அவர்  பேர்க் டயஸ் நிறுவன மற்றும் பன்னாட்டு அரிமா சங்க (Lions Club) பிரேதிநிதிகளால் வரவேற்கப்பட்டார், பொது மக்களும் அரவரமிட்டு அவரை உற்சாக படுத்தினர்.  இப்பயண தொலைவு 17350 கி.மி , இதனை 752  நாட்களில் கடந்து சாதனை படைத்த இவர் பயணத்தில் இரண்டு முறை மலேரியாவையும் ருசித்தார். மேலும் ஒரு முறை திருட்டுக்கும், இரண்டு முறை கொலை முயற்சிக்கும் உட்படுத்தப்பட்டார்
பல சோதனைகளை கடந்து சாதனை படைத்த ஜோ, தற்போது உலக கோப்பை போட்டிகளை கண்டு மகிழ்கிறார். போட்டிகள் முடியும் வரை தென் ஆப்ரிக்காவில்  தங்கி இருப்பார்.  ஜூலை பிற்பாதியில் தாயகம் திரும்புவார். இடைப்பட்ட காலத்தில் இவர் லெசோதோ, தென் ஆப்ரிக்கா, சுவாசிலாந்து  மற்றும் மொசாம்பிக் நாட்டு  அரிமா சங்க சேவை நடவடிக்கைகளை பார்வையிட திட்டமிட்டுள்ளார். 

பிரேசிலின் சினிமா இயக்குனர்களான ப்ருனோ லிமோ மற்றும் பாப்ரிசியோ, சினிமா தயாரிப்பு நிறுவனமான "அப்பாஸ் பிலிம்ஸ்" உடன் சேர்த்து இந்த பயணத்தை ஒரு குறும் படமாக எடுத்துள்ளனர். பெடல் ஜோவின் இந்த பயணத்தின் குறும் படம் பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு திரையிடப்படும்.
ஜாஸிம் புஹாரி | ஹாஃபில்


அதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள்


அதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள் எது என்று ஒவ்வொரு வருடமும்  கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டிற்கான பட்டியலை நேற்று போஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனம் வெளியிட்டது. உலக பொருளாதாரம் 11.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்த பட்டியல் தெரிவிக்கின்றது. பண முதலீடு, பொருளாதார சந்தையின் தொகை மற்றும் பலவிதமான சொத்துகளின் மதிப்புகளை வைத்து உலக பொருளாதாரத்தின் மதிப்பு 111.5 ட்ரில்லியன் என்று இதனுடன் வெளியிட்டு உள்ளனர். உலக பொருளாதார வீழ்ச்சியில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தும் அமெரிக்கவே இந்த பட்டியலில் வழக்கம்போல முதல் இடத்தில இருக்கிறது. அதிக மில்லினியர்களை கொண்ட முதல் பத்து நாடுகளை பற்றி இங்கே பார்போம்.

1. அமெரிக்கா   
             அமெரிக்காவில் மட்டும் நாப்பத்தி ஏழு லட்சத்தி பதினைந்து ஆயிரம் குடும்பங்கள் மில்லினியராக வாழ்வதாக இந்த பட்டியல் சொல்கிறது. இவர்களின் சொத்து மதிப்பு அமெரிக்காவின் பொருளாதரத்தில் ஐம்பத்தி ஆறு சதவீதம் இருக்கிறதாம். இது 15.1 சதவீதம் உயர்ந்து உள்ளது.

2. ஜப்பான்  
                ஜப்பானில் பனிரெண்டு லட்சத்தி முப்பதாயிரம் குடுமங்கள் மில்லினயராக வாழ்கிறார்களாம். இது 5.9 சதவீதம் உயர்ந்து உள்ளது. இவர்களின் பொருளாதார பங்கு 21 சதவீதம

3. சீனா   
               உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் மிக அதிக சதவீத வளர்ச்சியான 30.7 சதவீதம் உயர்ந்து உள்ளது. இவர்களின் பொருளாதார பங்கு சீனாவின் ஐம்பது சதவீதம் உள்ளது.

4. ஐக்கிய ராஜ்ஜியம்:
              ஐக்கிய ராஜ்ஜியம் (யுனிடட் கிங்டம்) - நான்கு லட்சத்தி எம்பத்தி ஐந்தாரியரம் மில்லினியர்கள் இருக்கிறார்கலாம். இது கடந்த ஆண்டின் 11.5 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி மூன்று சதவீதம்.

5. ஜெர்மனி:
                 நான்கு லட்சத்தி முப்பதாயிரம்   குடும்பங்களை கொண்டு ஜெர்மனி இந்த பட்டியலின் ஐந்தாவது இடத்தில உள்ளது. இது கடந்த ஆண்டின் 23.1 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ரெண்டு சதவீதம்.
 
6. இத்தாலி   
                  மூன்று லட்சம் மில்லினிய குடும்பங்கள் கொண்ட இத்தாலி இதில் ஆறாவது இடம்.  இது 7.6 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ஏழு சதவீதம்.
 
7. சுவிட்ஸர்லாந்து   
                  இரண்டு லட்சத்தி எம்பத்தி மூன்று ஆயிரம் நபர்களை கொண்ட சுவிட்ஸர்லாந்தின் வளர்ச்சி 8.4 சதவீதம். ஆனால் இவர்களின் பொருளாதாரம் அந்த நாட்டின் நாப்பத்தி நாலு சதவீதம்.


8. பிரான்ஸ்   
                  பிரான்ஸ் மில்லினிய குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தி எம்பதாயிரம். இது 11.2 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதாரம் பிரான்சின் பொருளாதாரத்தில் பத்தொன்பது சதவீதம் இருக்கிறதாம்.
9. தைவான்   
                 இரண்டு லட்சத்தி முப்பதாயிரம் மில்லினிய குடும்பங்கள். வளர்ச்சி 21.1 சதவீதம். இவர்களின் பங்கு முப்பத்தி ஏழு சதவீதம்.
 
10. ஹாங்காங்   
                இரண்டு லட்சத்தி ஐந்தாயிரம் குடும்பங்கள் கொண்ட ஹாங்காங் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில இருக்கிறது. வளர்ச்சி 16.2 சதவீதம். இந்த மில்லினிய குடும்பங்களின் பொருளாதார பங்கு எழுபத்தி மூன்று சதவீதம்.
 - ஜாஃபர் ஷாதிக் | நன்றி: ஜாஸிம் புஹாரி, ஜவ்சிக்


Monday, June 21, 2010

சிறந்த ஐ-போன் அப்ளிகேஷன்கள்


ஆப்பிள் ஐ-போன் தனக்கென்று தனிப்பட்ட பல அப்ளிகேஷன்கள் கொண்டது. ஆப்பிள் நிறுவனம் இதற்காக அப்ளிகேஷன் ஸ்டோர் என்னும் இடத்தில் ஐ-போன் பயன்படும் அப்ளிகேஷன் அனைத்தையும் பதிவுசெய்து வருகிறது. அதில் சில அப்ளிகேஷன் இலவசமாகவும், சில அப்ளிகேஷன்களுக்கு பணமும் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் நிறைய அப்ளிகேஷன் தனியாரால் தயாரிக்கப்படுகிறது.

ஆப்பிள் ஹக்கர் இயக்கம் பல அப்ளிகேஷன் தயாரித்துள்ளது . ஆனால் இந்த வகை அப்ளிகேஷன்கள் பெறுவதற்கு ஐ-போன் மென்பொருளை சரக் செய்திருக்க வேண்டும்.
ஐ-போன் அப்ளிகேஷன் மிகவும் உபயோகமானவை சி:

ஐ-ப்ளு-டூத்( IBLUETOOTH ):

ஆப்பிள் ஐ-போனில் ப்ளு-டூத் உண்டு ஆனால் எந்த ஒன்றும் மற்ற ப்ளு-டூத் போன்களுக்கு அனுப்ப முடியாது. இந்த அப்ளிகேஷன் மூலம் எந்த ஒரு இசை,படம் பிறருக்கு அனுப்ப முடியும். இந்த அப்ளிகேஷன் பெறுவதற்கு ஐ-போனில் சைடியா (cydia) என்னும் அப்ளிகேஷன் தேவை. சைடியாவில் http://cydia.xsellize.com/ என்னும் இந்த சோர்ஸ்-ஐ (source) புதிதாக சேர்க்க வேண்டும்.


ஐ-பைல் (IFILE):
இந்த அப்ளிகேசன் மிகவும் சிறந்த ஒன்று. இந்த அப்ளிகேஷன் மூலம் ஐ-போனுடைய எந்த ஒரு இயக்கத்தையும் மாற்ற முடியும். இந்த அப்ளிகேசன் பெறுவதற்கு சைடியா (CYDIA) தேவை. சைடியாவில் http://sinfuliphonerepo.com/ என்னும் இந்த சோர்ஸ்-ஐ (source) சேர்த்தல் இந்த அப்ளிகேசன் கிடைக்கும்.

குளோபல் ஏ.க்யு.லைட் (GLOBAL AQ LITE ) :
குளோபல் என்னபடும் இந்த அப்ளிகேஷன் மூலம் உலகெங்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப உதவும். இந்த அப்ளிகேஷன், அப்ளிகேஷன் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும். அப்ளிகேஷனில் ஒரு நாளைக்கு ஏழு SMS இலவசமாகு எந்த நாட்டிற்கும் அனுப்ப முடியும்.

எம்.எக்ஸ்.டூப் (MXTUBE):
யூ-டூப் (YOUTUBE) உடைய வீடியோக்களை நேரடியாக டவுன்லோட் (DOWNLOAD) செய்துகொள்ள இந்த அப்ளிகேசன் உதவும். இந்த அப்ளிகேசன் சைடியா(CYDIA)வில் கிடைக்கும்.

ஹெட்செட்(HEADSET):
ஹெட்செட் என்னும் இந்த அப்ளிகேஷன், அப்ளிகேஷன் ஸ்டோரில் கிடைக்கும். இந்த அப்ளிகேஷன் மூலம் ஐ-போனையும் கணினியையும் இணைத்து ஐ-போனை பேசுவதற்கு ஹெட்போனாக பயன்படுத்தலாம். இதற்கு WIFI வசதி அவசியம் தேவை.
-ஜாஸிம் புஹாரி


விம்பிள்டென் டென்னிஸ் போட்டி


கால்பந்துக்கு உலக கோப்பை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் டென்னிஸ் விளையாட்டிற்கு விம்பிள்டென்(WIMBLEDON) போட்டி. விம்பிள்டென் போட்டி மிகவும் பழமை வாய்ந்த, மிகவும் புகழ்பெற்ற புல் டென்னிஸ் போட்டி ஆகும். விம்பிள்டென் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் உள்ள விம்பிள்டென் என்னும் இடத்தில் இன்று துவங்க உள்ளது. இது அடுத்த மதம் நான்காம் தேதி வரை நடைபெறவுள்ளது. விம்பிள்டென் போட்டியில் வெற்றி பெறுபவறுக்கு  பரிசு தொகை 153 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணிக்கப்பட்டுள்ளது. இதன் இந்தியா மதிப்பு 700 கோடிகள்.   விம்பிள்டென் டென்னிஸ் போட்டியில் பல பிரிவுகள் உள்ளது ஆடவர் ஒற்றையர் பிரிவு (MENS SINGLES) , மகளிர் ஒற்றையர் பிரிவு (WOMENS SINGLES) , ஆடவர் ரெட்டையர் பிரிவு (MENS DOUBLES) , மகளிர் ரெட்டையர் பிரிவு (WOMENS DOUBLES) மற்றும் கலப்பு ரெட்டையர் பிரிவு ( MIXED DOUBLES) . டென்னிஸ் விளையாட்டில் உள்ள நான்கு கிரான்ட் ஸ்லாம் (GRANDSLAM) போட்டிகளில் ஒன்று. பீட் சாம்ப்ராஸ் (PETE SAMPRAS) என்னும் அமெரிக்க வீரர் அதிகபட்சமாக ஏழு முறை விம்பிள்டென் பட்டதை வாங்கி உள்ளார். இவரை அடுத்து ரோகர் பெடேரர்   (ROGER FEDERER) என்னும் சுவிட்சர்லாந்து வீரர் ஆறு முறை வாங்கி உள்ளார். மேலும் பெடேரர்  (FEDERER) இந்த ஆண்டும் வெற்றி பெற்றால் சாம்ப்ராஸ் உடைய சாதனையை சமன் செய்வார்.
- ஜாஸிம் புஹாரி


சதாம்


ஈராக்கின் சர்வாதிகாரி, ஈராக்கில் உள்ள ஷியா, குர்து இன மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றொழித்த கொடுங்கோலன்'' இவைதான் மேற்குலக நாடுகள் சதாமை வர்ணித்த வார்த்தைகள். சதாம் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்திருந்தது. அதற்கு வசதியாக பேரழிவு ஆயுதங்கள் பலவற்றை ஈராக் வைத்திருக்கிறது என்ற குற்றம் சுமத்தப்பட்டது.ஆனால் சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு கூறப்பட்ட குற்றச் சாட்டு சற்றும் எதிர்பாராதது. 1982ஆம் ஆண்டு 148 ஷியா இன மக்களைக் கொலை செய்ததாலேயே சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

1988ஆம் ஆண்டு விஷவாயு மூலம் 5 ஆயிரம் பேரைக் கொலைசெய்தது, குவைத்தை ஆக்கிரமித்தது, மதச்சார் பற்ற மதரீதியான கட்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டது, வடக்கு ஈரானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களைத் துரத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படலாம், அவை பற்றிய விசாரணைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தக்குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்பட முன்னரே சதாம் ஹுசைனுக்கு அவசர அவசரமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்கப் படையினால் கைதுசெய்யப்பட்ட சதாம் ஹுசைனை ஈராக்கிய நீதிமன்ற
ம் விசாரிக்கும் என்ற அறிவிப்பு வெளிவந்த உடனேயே சதாமின் மரணதண்டனை
ஊர்ஜிதமானது. சர்வதேச நீதிமன்றத்தின் முன் சதாம் ஹுசைனை நிறுத்தியிருந்தால் அவருக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும். அப்போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்திருப்பார். அந்தப் பதில் சில வேளையில் அமெரிக்காவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கும்.

இரண்டாவது உலகப் போரின் பின்னர் ஹிட்லரின் நாஜி படைத்தலைவர்களின் போர்க் குற்றங்களை விசாரித்த நூசெம்பர்க் நீதிமன்றம் குற்றவாளிகள் தமது தரப்பு நியாயத்தைக்கூற சந்தர்ப்பமளித்தது. ஈராக்கில் அதற்கெல்லாம் சந்தர்ப்பம் வழங்கப்படவில்ல. சதாமின் வாதத்தையைச் கேட்பதற்கு ஈராக் நீதிமன்றம் தயாராக இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதிலேயே ஈராக் நீதிமன்றம் உறுதியாக இருந்தது.

ஈராக் மீதான படையெடுப்பு அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. பிரதமர் பிளேயர் பதவி விலகும் நிலையை ஈராக் படையெடுப்பு உருவாக்கியது. அதேபோல் புஷ்ஷின் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் தோல்வியடையவும் ஈராக் படையெடுப்பு காரணமானது. சதாமின் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட மிகமோசமான நிலையில் இன்று ஈராக் உள்ளது.

ஈராக்கில் தினமும் சராசரியாக 100 பேர் மரணமடைகின்றனர். எப்போது குண்டு வெடிக்கும், எப்போது கைது செய்யப்படுவோம் என்ற மரண அச்சத்துடனேயே ஈராக் மக்கள் வாழ்கின்றனர்.

சர்வாதிகாரி சதாமிடமிருந்து ஈராக்கை மீட்கப் புறப்பட்ட அமெரிக்காவின் தலைமையிலான படை ஈராக்கைச் சுடுகாடாக மாற்றியுள்ளது. சதாம் மரணமானால் வன்செயல் அதிகரிக்கும் என்பது வெளிப்படை.

ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படைகளை வாபஸ் பெறவேண்டும் என்று
அமெரிக்காவில் கோசம் எழுந்துள்ளது. ஈராக்கில் அமெரிக்கப் படை நிலைத்து
நிற்கவேண்டுமானால் அங்கு வன்செயல்கள் அதிகளவில் நடைபெறவேண்டும். சதாமின் மரணம் ஈராக்கில் வன்செயலை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்ல. சதாமின் எதிரி
யான ஷியா இன மக்களின் முன்னிலயிலேயே அவர் தூக்கிலிடப்பட்டார். தனது ஆட்சிக்காலத்தில் தனது எதிரிகளை தூக்கில் போட்ட அதே சிறைக்கூடத்திலேயே தானும் ஒருநாள் தூக்கில் தொங்குவேன் என சதாம் ஹுசைன் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

அமெரிக்காவின் துணையுடன் ஈரானில் அட்டூழியம் புரிந்த சதாமுக்கு அதே அமெரிக்காவின் துணையுடன் அவரது பரம எதிரிகள் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். அமெரிக்காவிடம் அடிமைப்பட்டிருக்கும் ஈராக்கில் தனது உடல் புதைக்கப்படக்கூடாது என்று சதாம் விரும்பினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேற்றப்படவில்லை. சதாமின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட ஷியா குர்துஇன மக்களின் உறவினர்கள் சதாம் தூக்கில் தொங்கி உயிரிழப்பதைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.ஷியா மக்களின் வலிமைமிக்க தலைவரான "முக்டதா'என்பவரின் பெயர் சதாமுக்கு முன்னால் உச்சரிக்கப்பட்டது. ஈராக்கின் மூலைமுடுக்கெல்லாம் தனக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டு அழித்தொழித்த சதாம் தன் முன்னால் தனது அரசியல் எதிரியான முக்டதாவின் ஆட்கள் இருப்பதை அப்போது தான் அறிந்து கொண்டார். ஈராக்கை கட்டியாண்ட சதாமின் கரங்களில் இறுதிவரை இருந்த குரானும் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதியின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டன. தன்னைஎதிர்த்தவர்களை அடக்கி ஒடுக்க உத்தரவு போட்ட கரங்கள் செயலிழந்தன.மரணப் பாதையை துணிந்து தேர்ந்தெடுத்த சதாம் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகி "யா அல்லா' என்றார். ஷகாதாவை உச்சரித்தபடி அவரது உயிர் பிரிந்தது.

மரணதண்டனை கைதியின் முகத்தை மூடுவதுதான் வழமை. தனது மரணத்தின்போதும் முகத்தை மூடக்கூடாது என்று சதாம் ஹுசைன் கூறியதால் அவரது முகம் மூடப்படவில்லை. மரணதண்டனையை நிறைவேற்றியவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.
விசைப் பலகை இழுக்கப்பட்டதும் அவரது கால்களைத் தாங்கி இருந்த பலகை விலகியது. கை, கால்களில் சிறு அசைவுகூட இல்லாமல் உயிர் பிரிந்தது.அரபு உலகில் வெள்ளிக்கிழமைதான் மரணதண்டனை வழங்கப்படும். சட்டப் பிரச்சினைகள் காரணமாக வெள்ளிக்கிழமை தண்டனை வழங்க முடியவில்லை. சதாமின் சொந்த ஊரான அவ்ஜாவில் அவரது உடலை அடக்கம் செய்ய ஈராக் அரசு முடிவு செய்தது. சனிக்கிழமை இரவு 11.45 மணியளவில் சதாமின் உடல் ஹெலிகொப்டர் மூலம் திக்ரிக் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த நகரின் அருகில்தான் அவ்ஜா நகர் உள்ளது. சதாமின் ஆட்சிக் காலத்தில் மதப்பண்டிகைகளுக்காக கட்டப்பட்ட எண்கோண மண்டபத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஞாயிறு காலையில் பொழுது விடியத்தொடங்கியதும் அணி அணியாகத் திரண்ட மக்கள் கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்தனர். சதாமின் கல்லறை புண்ணிய ஸ்தலமாக மாறியது. ஈராக்கில் நுழைந்த அமெரிக்காதான் நினைத்ததை தனது பொம்மை அரசைக் கொண்டு செய்து முடித்துள்ளது.
- அம்ஜத் அலி கான்


கஜல் ஓர் அறிமுகம்.


‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.

‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- அப்துல் ரகுமான்.

அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் ‘மிர்சாகாலிப்’ தான். கஜல் என்றாலே அதில் ‘மிர்சாகாலிப்’பின் வாசம் வீசும்.’ என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று…

காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு
வினோதமான நெருப்பு!
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!
- மிர்சாகாலிப்

அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.
- அப்துல் ரகுமான்.
- அம்ஜத் அலி கான்


Friday, June 18, 2010

RAAVAN ***


STORY: Its not a new story, nobody says its a new story. Its very difficult to make a old story in new format. So its no use of discuss about story.

DIALOGS: Not clear? no prasanth, its very accurate. So many lines are compressed as single words. So many meaningful & powerful dialogs.

CAMERA: No need to discuss, everyone accepts its a main PLUS of the film. Santhosh Sivan & MAnikandan.

MUSIC: A.R is always good, It should be a extra special for mani ratnam always. So many backgrounds are stands unique. Even sme more bits songs with are not in the music album. Deep music..

Both Vairamuthu(Tamil) & Gulzar(Hindi) lyrics are above average. Got the translation of hindi versions

SINGERS: Shreya Ghosal, Reena Bharadwaj, Vijay Prakash, Kaarthik, Javed Ali, Mohamed Irfan, Mustafa Kutone, Keerthi Sagathia, Sukwinder etc etc... al are done their good job.

Art, Acting & Everything is ok.

It may be a good movie when u saw few period later.

Released 2,200 screen worldwide

Reuters says "Very little Mani, and absolutely no magic"
 Rediff says "Raavan is unforgivably boring"
Times of India says "Raavan is chicken soup for the senses. Go, indulge yourself"
Guardian says "filled with the traditional extravagances, but its Robin Hood theme can't disguise its innate sexism"
Wall Street Journal says "In comparison the Ramayan is boring. The ‘Mahabharat’ is full of blood and guts. It’s a dark tale in which there’s a war and everybody dies.

Almost every media have a normal/avarage  feedbacks & 2-3 stars.

 Everything is Good, But which one is wrong? Expectation? huh, Mani Ratnam's usual film (But 'usual' says he is always Good, lol)


Wednesday, June 16, 2010

பிரான்சில் கடும் புயல், மழை. 19 பேர் பலி, 7 காணவில்லை


பிரான்சில் தென் பகுதியில் பெய்ந்த பலத்த மழை மற்றும் புயல் காற்று வீசியதால் பத்தொன்பது பேர் பலியாகி உள்ளதோடு ஏழு பேரை காணவில்லை என்று அந்த நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது. முன்னூற்றி ஐம்பது மில்லி மீட்டர் பெய்த இந்த மழை 1827 ஆம் ஆண்டிற்கு பிறகு பிரான்சில் நடக்கும் கடுமையான பாதிப்பு என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஒரு லட்சம் வீடுகள் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் பிரிக் ஹோர்டேபெவ்ஸ் (Brice Hortefeux)   செய்தியாளர்களுடன்    தெரிவித்தார்.  இந்த புயல் மழையால் நூற்றுகணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்து, பல வீடுகள் தண்ணீரால் மூழ்கியும் கிடக்கிறது. அங்குள்ள மக்கள் நகரமெங்கும் பாறைகள், கற்கள் மற்றும் சேற்றுகள் நிறைந்துள்ளதாகவும், வாகனங்களால் சாலைகள் அனைத்தும் அடைக்க பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமோ என்று அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்


குரங்கும் குவாட்டரும்


 என் இனிய தமிழ் மக்களே குரங்களிடம் அடி வாங்கும் ஒரு கிராமத்தின் கதை இது (உண்மையான கதை பா).. ஒரிசாவின் புவனேஸ்வர் அருகே இருக்கிறது  பாத்ரா கிராமம். ஒரு நாள் குரங்கு குரூப் ஒன்று அந்த கிராமத்தின் மூன்று இளைஞர்களை தாக்கியது..கடுப்பான கிராம மக்கள் குரங்குகளை துரத்தி அடித்தனர். பல குரங்குகள் படுகாயமடைய, இரக்கப்பட்ட கிராம மக்கள் சிலர் அவற்றை மருத்தவமனையில் சேர்த்தனர். சிகிச்சை காலத்தில் ஆல்கஹால் கலந்த டானிக்கை கொடுத்து குரங்குகளை தொடர் மயக்கத்த்லேயே வைத்திருந்தனர். குணமான பிறகும் குரங்குகளுக்கு அந்த போதை தேவைப்பட்டது. இதனால் கிராமத்தில் இருந்த மதுக்கடைக்குள் புகுந்துவிட்டன அந்த குரங்குகள். ஆரம்பித்தது வினை. தினம் மது கடைக்கு குரங்குகள் படையெடுக்க கடையே மூடிவிட்டார்கள். போதை பழக்கமான குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பாட்டில்களை அள்ளிசெல்ல ஆரம்பித்தன. வீட்டில் பாட்டில் ஏதும் இல்லையென்றால், ஆட்களையும் கோபத்தில் அடி பின்னி எடுகின்றனவாம்.. இதனால் கட்டிங் பிளஸ் மிக்ஸ்சிங்கோடு வீட்டு வாசலில் பாட்டிலை வைத்துவிடுகிறார்கள் பாத்ரா மக்கள். செலவு கட்டுபடியாகதால் அங்கே இப்போது போதை தரக்குடிய பச்சிலை ஒன்றை அரைத்து, தண்ணீர் கலந்து விட்டு முன் வைக்கிறார்கள். இப்போது பச்சிலை சாற்றை சாப்பிட்டு போதையில் குரங்குகள் டான்ஸ் வேற ஆடுகிறதாம் (இந்த கொடுமையை நான் எங்கே பொய் சொல்ல).. 
முஹம்மத் சாதிக் 


உலக கோப்பை கால்பந்தின் புதிய பிரச்சனைகள்


உலக கோப்பை கால்பந்து போட்டியில் நிலவும் சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் : எப்போதும் போல் இந்த ஆண்டு உலக கோப்பையும் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது. போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே அமெரிக்க நாட்டில் இருந்து பல ஆயிரக்கனக்கான விலைமாந்தர்கள் கால்பந்து ரசிகர்களை மகிழ்விக்க தென் ஆப்ரிக்கவிற்கு சென்றனர். இது மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது.
தற்போது உலக கோப்பை போட்டிகள் ஆரம்பித்துள்ள நிலைமையில் போட்டி மைதானத்தில் நிலவும் ஹாரன் சத்தம் தொலைகாட்சியில் பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் விளையாடும் வீரர்களுக்கும் தொந்தரவாக உள்ளது. இந்த சத்தம் தொந்தரவாக உள்ளதாக வீரர்கள் பலர் கூறியுள்ளனர். கால்பந்து விளையாட்டுகளில் இந்த ஹாரன் சத்தம் தடைசெயயபட்டுளது என்பது குறிப்பிடப்பட்டது.

மற்றொரு சர்ச்சை விளையாட்டில் உபயோகிக்கும் அடிடாஸ் (addidas) நிறுவனத்தின் ஜபுழனி(jabulani) என்னும் பந்து. இந்த பந்து அடிடாஸ் நிறுவனத்தால் ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பந்தின் வடிவமைப்பில் தவறு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் இதை மறுத்துள்ளது. அந்த நிறுவனம் தெரிவிப்பதாவது இது மிகவும் துல்லியமாக தயாரிக்கப்பட்ட பந்து என்று அறிவித்துள்ளனர். ஆனால் எப்பொழுதும் இல்லாமல் இந்த உலக கோப்பை போட்டியில் பந்து தடுப்பவர்கள் (goal keeper) பலர் சிரமப்பட்டு வருகின்றனர். அல்ஜீரியா (algeria) , இங்கிலாந்த் (england) அணியின் தடுப்பாளர்கள் மிகவும் பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு என்ன முடிவு என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
- ஜாஸிம் புஹாரி  


Tuesday, June 15, 2010

மிருக பயம்


உலகின் அனைத்து  மிருகங்களுக்கும் எதாவது ஒரு இனம் புரியாத பயம் இருக்கும். அவற்றில் சிலவற்றை இப்போது பார்போம்...

பிம்பம்: யானைகளையும் மனிதர்களோடு பழக்கபட்ட குரங்குகளையும் தவிர, பெரும்பாலான மிருகங்கள் தங்கள் பிம்பங்களை பார்த்து தாமே பயப்படும்..(தூங்கி எழுந்து நம்ப முகத்த பார்த்த நமக்கே பயம் வரும் அல்லவா அதே மாதிரி). ஒரு கண்ணாடியை அவற்றின் முன் வைத்தால் கண்ணாடி உடையும் வரை சண்டை போடும்!..

மழை: நாய் இனத்தை சேர்ந்த அனைத்து மிருகங்களுமே மழைக்கு பயப்படும். அதுவும் அவை வாழ்நாளில் முதல் முறையாக மழையை பார்க்கும் போது பயங்கரமா குறைத்து கொண்டே இருக்குமாம் ..(எங்க ஊர்ல நாய் குலைக்காது ஊள தான் விடும் லேடி டாக் கரெக்ட் பண்ண)..

நீர்: பூனைகளின் திருட்டு தனத்தை அவை தண்ணிரை கடக்கும் போதே தெரிந்து கொள்ளலாம். பூனை தன்னால் முடிந்த அளவு தண்ணீர் படாமல் பார்த்து கொள்ளும்!

தன் மேல் தனக்கே பயம் : டாபர்மேன் நாய்களை நாம் வாலோடு பார்ப்பது கடினம். அதன் உரிமையாளர்கள் அவை குட்டியாக இருக்கும் போதே வாலை ஓட்ட நறுக்கி விடுவார்கள். காரணம் வாழ் அசையும் போது தனக்கு பின்னால் தான் பார்க்கவே முடியாத ஒன்று அசைவதால் பயந்து போகும் டாபர்மேன்கள், அந்த வாலை கடிக்க முயன்று கழுத்து உடைந்து செத்துவிடும். பயம் மனிதர்களை மட்டுமல்ல மிர்கங்களையும் ஆட்டி படைக்கிறது..  
-முஹம்மது சாதிக் 


Monday, June 14, 2010

காற்றினால் இயங்கும் நான்கு சக்கர வாகனம்


முன்னால் ஏரோனாடிக் மற்றும் போர்முல ஒன் பொறியாளரும் ஆனா GUY NEGRE என்பவர் அழுத்தமான காற்றினால் இயங்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். மோட்டார் டேவலாப்மென்ட்  இன்டர்நேஷனல் (MOTOR DEVELOPMENT INTERNATIONAL) என்னும் கம்பெனியை பிரான்ஸ் நாட்டில் லக்சம்பெர்க் (LUXEMBERG) என்னும் ஊரில் உருவாகினார். அதில் இந்த தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியை மேம்படுத்தி வந்தனர். இவர்களுடைய படைப்புகளில் ஒன்று ஏர்பாட் (AIRPOD) என்று அழைக்கப்படும் நான்கு சக்கர வாகனம்.

இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடுப்பு ஆகும் . இதில் வாகனத்தை செயல்படுத்த  அழுத்தமான காற்றை கொண்டு பிஸ்டனை (PISTON) செயல் படுத்துகின்றனர். 5.45 HP வேகத்தில் கம்புச்தியன் என்ஜின் (COMBUSTION ENGINE) செயல் படுத்த முடிகிறது. இதில் ஒரு சிலிண்டரில் காற்று அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் , மேலும் ஒரு சிறிய மோட்டார் வெளியில் உள்ள காற்றை அழுத்தி டேங்கை எப்போதும் முழுமையாக வைத்துகொள்ள உதவும். இதனுடைய கம்ப்றேச்சொர் (COMPRESSOR) டீஸல் , எதனால் (ETHANOL) , என்னை மற்றும் மின்சாரம் போன்ற வற்றல் இயங்கும் ஆற்றல் உடையது . மேலும் 200 KM தொலைவு செல்ல வெறும் 0.5 EURO செலவாகிறது.
 ஏற்பாட் (AIRPOD) வாகனத்தில் மூன்று நபர்கள் செல்ல முடியும். இது குறைந்த விளையும், எந்த ஒரு தீங்கும் இல்லா வாகனமாகும் .

இது தற்போது பாரிஸ் விமானநிலையத்தில் உபயோக படுத்தபடுகிறது.
மோட்டார் தேவேலோப்மேன்ட் இன்டர்நேஷனல் (MOTOR DEVELOPMENT INTERNATIONAL) நிறுவனம் ஆனது இந்திய நாட்டின் டாட்டா நிறுவனத்துடன் ஒபந்தம் செய்துள்ளது. இந்தியாவில் டாட்டா ஒனேகாட் (TATA ONECAT) என்னும் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
ஜாஸிம் புஹாரி


யாஸ் மரினா சர்கிட், நான்கு சக்கர வாகன போட்டி மைதானம்


யாஸ் மரினா உலக அளவு நான்கு சக்கர வாகன போட்டி ( FORMULA 1 GRAND PRIX ) நடைபெறும் ஒரு இடம் ஆகும் . இது UAE நாட்டின் அபுதாபி நகரில் யாஸ் தீவில் அமைந்துள்ளது. யாஸ் மரினா வளைகுடா நாடுகளில் இரண்டாவது போட்டி இடம் ஆகும் , முதலாவது பஹ்ரைன் நாட்டில் உள்ளது. யாஸ் மரினா ஹெர்மன் டில்கே என்னும் ஜேர்மன் நாட்டு கட்டிடகளை நிபுணரால் வடிவமைக்க பட்டது. இது மொனாகோ ( MONTE CARLO ) பந்தய இடத்தின் அரேபிய மாதிரியாக வடிவமைக பட்டுள்ளது. மொனாகோ பந்தயம் உலகின் மிகசிறந்த நான்கு சக்கர வாகன பந்தய இடம் ஆகும். யாஸ் மரினா செயற்கையாக மற்றும் அழகாக உருவான இடம்.

யாஸ் மரினா சர்கிட் அபுதாபி அரசாங்கத்திற்கு சொந்தமானது . இது அக்டோபர் மாதம் 2009 இல் திறந்து வைக்கபட்டது. இந்த மரினா சர்கிட்இல் 21 கடினமான வளைவுகள் உள்ளது அது பந்தயகாரர்களுக்கு மிகவும் சவாலாக விளங்குகிறது. அகவே இது உலகின் மிக சிறந்த நான்கு சக்கர வாகன பண்டைய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

எதிஹாத் விமான அமைப்பு இதன் ச்போன்செர் ஆகும்.
மக்கள் கொள்ளவு - 41,093
நீளம் - 5.554 KM
வளைவுகள் - 21
பார்முலா 1 அமைப்பு அபுதாபி யாஸ் மரினா வில் எட்டு வருடம் பந்தயம் நிகழ்த்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதை தொடர்ந்து முதல் பார்முலா 1 FORMULA 1 ETIHAD AIRWAYS ABU DHABI GRAND PRIX  போட்டி 30 அக்டோபர் முதல் 01 நவம்பர் 2009வரை நிகழ்ந்தது. அந்த வருடத்தின் கடைசி போட்டியும் அதுவே . இந்த போட்டியில் செபஸ்டியன் வேட்டல் ( SEBASTIAN VETTAL ) என்னும் ரெனால்ட் ( RENAULT ) அணியை சேர்ந்த வீரர் முதல் இடம் பிடித்தார் . இவரை தொடர்ந்து மார்க் வேப்பர் ( MARK WEBBER ) அதே ரெனால்ட் ( RENAULT ) அணி இரண்டாவது இடத்தையும் , ஜசோன் பட்டன் ( JASON BUTTON ) மெர்செடெஸ் ( BRAWN MERCEDES ) அணியை சேர்ந்தவர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 2009 ஆம் வருததின் சாம்பியன் ஆக ஜசோன் பட்டன் தேர்ந்தேடுகபட்டார்.

இந்த வருடத்திற்கான போர்முல 1 எடிஹாத் ஐர்வய்ஸ் அபுதபி கரண்ட் பிரிக்ஸ் ( FORMULA 1 ETIHAD AIRWAYS ABU DHABI GRAND PRIX 2010 ) போட்டி 12 நவம்பர் முதல் 14 நவம்பர் வரை நடக்க உள்ளது .
 -ஜாஸிம் புஹாரி


Sunday, June 13, 2010

ஒரு வயது சீன குழந்தை இரட்டை குழந்தையை சுமக்கிறது..!


ஒரு வயது சீன குழந்தை இரட்டை குழந்தையை சுமக்கிறது..!
முதலில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சீன மருத்தவர்கள் நம்பவில்லை பின்பு நேரடியாக சென்று பார்த்த பிறகு அதிர்ச்சியில் உறைந்து போயினர்..!
Kang Mengru  - என்று அழைக்கப்படும் அந்த குழந்தை ஒரு அனாதையாகும், ஒரு சீன தம்பதிகள் அந்த குழந்தை எடுத்து வளர்க்க ஆரம்பித்த போது அந்த குழந்தையின் வயிறு ஆனது பெரிதாகி கொண்டே போனது முதலில் இதை தீய சக்தி என்று கருதிய  தம்பதிகள் பின்பு மருத்தவரிடம் கொன்று காண்பித்த போது தான் தெரிந்தது அந்த குழந்தையின் வயற்றில் இரண்டுசிசு வளர்வது தெரிய வந்தது..,
முதலில் மருத்தவர்கள் கருத்தடை செய்ய முயற்சித்தனர். ஆனால் சில சமயங்களில் கருத்தடை மிகவும் ஆபத்தானது என்று கருதிய மருத்தவர்கள் பின்பு அறுவை  சிகிச்சை மேற்கொண்டு அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த சிசுவை எடுத்து விட்டனர்..கடவுளின் கருணை அந்த குழந்தை இப்போது நலமுடன் இருப்பதாக மருத்தவர்கள் குறியுள்ளனர்...இந்த உலகம் எதையோ நோக்கி பொய் கொண்டிருகிறது என்பது மட்டும் மறக்க முடியாத உண்மையாகும்.. 
Recovering ... tiny 
Kang had surgery to remove parasitic twin குழந்தை குணமாகி வரும் படம் இது. பூர்ண குணமாக வேண்டிகொள்வோம். 
- முஹம்மத் சாதிக்


ஸ்பெயினின் தக்காளி திருவிழா


தக்காளியை வைத்து ரசம் வைக்கலாம் ஏன் முட்டை பொறியல் கூட செய்யலாம் . திருவிழா கொண்டாட முடியுமா? அது தான் ஸ்பெயினின் ஸ்பெஷல் திருவிழா.

valencia மாகாணத்தில் உள்ள புனால் நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் லா டோமொடினா என்ற தக்காளி சண்டை திருவிழா நடைபெறுகிறது. லாரி லாரியாக குவிக்கப்பட்ட தக்காளியை ஆளாளுக்கு ஒருவர் மீது ஒருவர் விச, ரோட்டில் தக்காளியை கொட்டி அதில் உருள சிலர் அதில் குளிக்க.. என அந்த ஊரே சிவந்து போகிறது., சாலை எங்கும் தக்காளி வெள்ளம் (நாம ஊர்ல சாக்கடை வெள்ளம் மட்டும்தான் ஓடுது)..
 
உள்ளூர் வாசிகள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சேர்ந்து கொள்வதால், தக்காளி வீசும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்த படியே போகிறது.
1945-இல் ஒரு திருவிழா ஊர்வலத்தின் போது சில கிராமத்து சிறுவர்களுக்கு இடையே தகராறு.. பக்கத்தில் இருந்த காய்கறி கடையின் தக்காளியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டார்கள். அது அன்றோடு முடிந்துவிட்டது. ஆனால் அடுத்த வருடம் அதே இடத்தில் ஒரு தக்காளி வண்டி சரிந்து விழ, சூழ்ந்து நின்ற பொது மக்கள் விளையாட்டாக எடுத்து கொண்டு அடித்து கொள்ள துவங்கினர்..
 
இப்படியே இது பழக்கமாக.. அடுத்தடுத்த வருடங்களில் மக்களே கைக்காசு போட்டு தக்காளி வாங்கி அடித்து கொண்டனர். படிபடியாக அது ஒரு திருவிழாவாக மாறியது.. இடையில் ஒரு முறை ஸ்பெயின் அரசு இந்த விழாவுக்கு தடை போட்டது..மக்கள் தக்காளியை பெட்டியில் வைத்து சவ ஊர்வலம் நடத்தினர், பிறகு அரசு தானே முன் வந்து இந்த திருவிழாவுக்கு உரிமை அளித்தது..ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவில் பயன்படுத்தப்படும் தக்காளியின் ஏஎடை எவ்வளவு தெரியுமா 125 டன்...! விழா முடிந்த பிறகு அந்த தெருவை சுத்த படுத்தவார்கலாம்..
- முஹம்மத் சாதிக்


ஸ்மார்ட்போன் - அன்று முதல் இன்று வரை




ஸ்மார்ட்போன் என்பது சாதாரண மொபைல்களை  விட வேகமான, அதிகமான கூடுதல் வசதிகளை கொண்டது. சாதாரண போன்கள் ஜாவா மற்றும் BREW போன்ற சில பிளாட்போர்ம்களை தான் பயன்படுத்த முடியும், ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் அதிகமான விசயங்களை உபயோகிக்க முடியும். இது அப்பரேடிவ் சிஸ்டம்களை முழுவதுமாக பயன்படுத்த முடியும். இது போன்ற ஸ்மார்ட்போன்கள் பிரபலான முக்கிய காரணம் நல்லா ப்ரோசெச்சொர்(Processor), அதிகமான மெமரி மற்றும் நேரடி அப்பரேடிவ் சிஸ்டம் பயன்படுத்த முடியும் 



2010  ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் மார்கெட் நிலவரம்:

சிம்பியன்:          44 சதவீதம்
ரிம்:                     19 சதவீதம்
ஆப்பிள்:             15 சதவீதம்
ஆண்ட்ரியாட்:  10 சதவீதம்
விண்டோஸ்:     7 சதவீதம்
லினக்ஸ்:            4 சதவீதம்
மற்றவை:           1 சதவீதம்

பிரபல போன்களின் அப்பரேடிவ் சிஸ்டங்கள்:
நோக்கியா - சிம்பியன்
சோனி எரிக்சன் - சிம்பியன்
ப்ளாக்பெர்ரி - ரிம்
ஆப்பிள் - IOS 
ஹெட்.டி.சி ட்ரீம் மற்றும் நெக்சஸ் (கூகுள்) - ஆண்ட்ரியாட்
ஐ-மேட், ஹெட்.டி.ச, ஓ 2  - விண்டோஸ்
நோக்கியா 900 - MAEMO 
சாம்சங் - லினக்ஸ்

ஸ்மார்ட்போன் - சில குறிப்புகள்:

          முதல் ஸ்மார்ட்போன் 1992 ஆம் ஆண்டு IBM கம்பெனி தயாரித்து. அதன் பெயர் சிமோன்.
          நோக்கியா கம்பனின் முதல் ஸ்மார்ட்போன்: நோக்கியா 9000. இது 1996 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.
            ப்ளாக்பெர்ரியின் ரிம் 2002 லும், ஆப்பிள் 2007 லும் துவங்கப்பட்டது  
- ஜாஸிம் புஹாரி, ஜாஃபர் ஷாதிக் 


Saturday, June 12, 2010

உலக கால்பந்து போட்டியில் இந்தியாவின் பங்கு


                       கால்பந்து உலக கோப்பை தென் ஆப்ரிக்க நாட்டில் துவங்கி உள்ளத்தால் உலகம் முழுவதில் உள்ள கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .  உலக அளவு கால்பந்து போட்டிகளில் நமது தாய்நாட்டின் நிலைமை என்ன ?
                       1948 ஆம் ஆண்டு இந்திய தேசிய அணி FIFA வில் ஒரு அங்கத்தினராக சேர்ந்தது . அன்று முதல் இன்று வரை இந்திய தேசிய அணி ஒரே ஒரு முறை உலக கோப்பை போட்டிகளில் விளையாட தகுதி பெற்றது. 1950 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஆசியா கண்டம் பிரிவில் பங்கேற்ற அணிகள் அனைத்தும் நீக்க பட்டன இதனால் இந்திய அணி விளையாட தகுதிபெற்றது . ஆனால் FIFA அமைப்பின் விதிப்படி பூட்ஸ் காலணி இல்லாமல் விளையாட முடியாது . இந்திய வீரர்களோ வெறும் காலில் விளையாடுபவர்கள் என்று அறியப்பட்டு வந்தனர் , இதனால் இந்திய வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர் .
              அன்று முதல் இந்திய தேசிய அணி FIFA உலக கோப்பையில் விளையாட தகுதி பெறவே இல்லை. 1954 - 1982 ஆம் ஆண்டுகள் இந்திய அணி தகுதி போட்டியில் பங்கேற்கவே இல்லை. 1986 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்திய அணி பங்கேற்கிறது ஆனால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற முடிய வில்லை . இந்த ஆண்டு உலக கோப்பை தகுதிக்காக இந்திய அணி லெபனான் அணியுடன் இரண்டு முறை மோதியது , ஒரு முறை தோல்வியும் ஒரு முறை சமம் (DRAW) ஆனது . இதை அடுத்து லெபனான் அணி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய அணி வெளியேறியது .
         இந்திய அணி FIFA உலக தர வரிசை பட்டியலில் 133 ஆம் இடத்தில உள்ளது. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில இருக்கும் நம்மால் மிக சிறிய நாடுகளை குடு வெல்ல முடியவில்லை காரணம் இந்தியாவில் கால்பந்தைவிட கிரிக்கெட் ஆட்டத்தை மக்கள் விரும்புகின்றனர். இந்திய அரசாங்கமும் இந்த விளையாட்டிற்கு பெரும் பங்கு அளிக்க  வில்லை . கோவா , கேரளா , வேச்ட்பேங்கால் , மணிப்பூர் , மிசாரம் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் கால்பந்து மிகவும் ப்றேசுட்தி பெற்ற விளையாட்டு . மற்ற மாநிலங்களில் மிகவும் குறைவாகவே விளங்குகிறது . நம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டிற்கு குடுக்கும் சலுகைகளும் வசதிகளும் கால்பந்து விளையாட்டிற்கும் கிடைத்தால் நிச்சயமாக நமது நாடு உலக அளவில் சிறந்து விளங்கும் .
ஜாஸிம் புஹாரி  


Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha